தொடரும் நண்பர்கள்

சனி, 28 அக்டோபர், 2017

ஈழத்தில் விளைந்த வீர தளபதிகள் - சத்திய சோதனை..



யாழ் தேவி..

இது எதிர் தாக்குதல் ,கால அளவு மிகவும் குறைவு , பால்ராஜ் நிறைவான திட்டமே தீட்டினார்.

அலுவலக பணியில் பால்ராஜ் 

பூநகரி திட்டத்தில் இருந்து உடனடியாக தனது நடவடிக்கைகளை மாற்றி யாழ்தேவி ஆபரேஷன் முறியடிப்பில் இறங்கினார். கடுமையான யுத்தம் , சிங்கள படைகள் யானை இரவு முகாமில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தார்கள். பால்ராஜ் கள நெருக்கடியில் வழக்கம் போல் களமுனைக்கு சென்று ஆயுதம் ஏந்தினார். அவர் ஒரு திறமையான RPG shell அடிக்கும் வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில்  ஒரு டாங்கியை தகர்க்கும் போது பால்ராஜின் காலில் கடுமையான காயம் பட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் படை நடத்தி சிங்கள படையை பின்வாங்க வைத்தார். மேலும் ஒரு டாங்கியை முழுமையாக கைப்பற்றி தங்கள் வசம் ஆக்கினார்கள் இதே நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களும், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களும் கடுமையாக காயம் அடைந்தர்கள். காயத்திற்கு பிறகும் பால்ராஜ் கள ஒருங்கிணைப்பை செய்தார் என்பதில் ஆச்சரியம் இல்லை. 


புலிகளின் தாக்குதல் 

புலிகளின் மீதான கடைசி யுத்தத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா தான் ராணுவ தளபதியாக இருந்து சிங்கள ராணுவ படை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .


முல்லைத்தீவு தாக்குதல்

1996 ஆம் வருடம் யாழ் குடாவில் இருந்து புலிகள் பின்வாங்கினார்கள் தங்கள் நடவடிக்கைகளை வன்னிக்கு மாற்றி அமைத்தார்கள். தலைவரின் உத்தரவுக்கு இணங்கி முல்லைத்தீவு ராணுவ முகாம் தாக்குதலுக்கான திட்டம் தயாரிக்க பட்டது. பால்ராஜ் இந்த தாக்குதலுக்கு இட்ட பெயர் “ஓயாத அலைகள்-1“.  திட்டம் தயாரிக்க பட்டது , முழு வீச்சில் பயிற்சிகளும், உளவு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. தாக்குதலுக்கான நாள் குறிக்க பட்டு தாக்குதல் திட்டங்கள் இறுதி வடிவம் பெற்றது.

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள்  திட்டப்படி தாக்குதல் தொடங்கியது. முதலில் கைப்பற்றவேண்டிய இடம் கடற்கரை பகுதி அங்கு கடுமையான சண்டை நடந்தது. சிங்கள படைகளிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றபட்டது. அந்த ஆயுதங்களில் கனரக பீரங்கிகளும் அடங்கும்.

கடற்கரையில் சிறிதாவது தங்கள் வசம் இருந்தால்தான் மேலதிக படைகளை நாம் பெற முடியும் என்கிற ஒரு நினைப்போடு சிங்கள படைகளும் களமாடின. பால்ராஜ் கள முனையில் இருந்து நிலமையை அவதானித்து தலைவருக்கு ஒரு செய்தி அனுப்பினார். மேலதிக படைகள் இல்லை என்றால் கடற்கரை நமது கட்டுபாட்டுக்குள் வராது, இது சிங்கள படைகளுக்கு மேலதிக படைகள் வருவதற்க்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிவித்தார்.

தலைவரின் உத்தரவுக்கு இணங்க கர்னல்.பானுவின் படை உதவிக்கு அனுப்பப்பட்டது. அதுவரை சாதகமில்லாமல் இருந்த கள நிலவரம் புலிகளுக்கு சாதகமாக மாறியது. மீதம் இருந்த கடற்கரையும் புலிகள் வசமானது.





மேலதிக உதவிக்கு வந்த சிங்கள படைகள் புறமுதுகிட்டு தங்கள் முகாம் நோக்கி திரும்பின. சுமார் ஆயிரம் சிங்கள வீரர்கள் வரை கொல்லப்பட்டார்கள். ஆயுதங்கள் அதிக அளவிலே கைப்பற்ற பட்டன. ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இந்த தாக்குதலில் தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

“சத்ஜெய” முறியடிப்பு தாக்குதல்

முல்லைத்தீவில் அடிபட்ட சிங்கள படை அடுத்த திட்டமாக “சத்ஜெய” என்னும் படையெடுப்பு தாக்குதல் நடத்தி பரந்தன் என்னும் இடத்தை பிடித்தார்கள். வெற்றி பெற்ற சிங்களப்படை அடுத்த நடவடிக்கையாக சத்ஜெய-2 என்னும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் தடுத்து நிறுத்தி சிங்கள படைகளை திரும்ப அனுப்ப பால்ராஜ் அங்கு அனுப்பப்பட்டார். சிதைந்து இருந்த காவல் அரண்களை ஒழுக்குபடுத்தி மீண்டும் படைகளை தயார்நிலையில் எல்லையில் நிறுத்தினார். சத்ஜெய-2 நடவடிக்கை நடந்தால் எதிர்கொள்ள பால்ராஜின் திட்டம் தயார்.

அவரது திட்டத்தை விளக்க வேண்டும் என்றால்   - புரிந்துகொள்ள ஏதுவாக ஒன்றை சொல்கிறேன்...

ஒரு ஆறு ஒன்று ஓடுகிறது அதில் இருந்து ஒருபுற கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து பள்ளமான திசையில் பயணிக்கிறது என்று வைத்துகொள்வோம். முதலில் வெள்ளத்தை ஊருக்குள் கரையை உடைத்துக்கொண்டு உள்ளே வர விடுவது. உடனடியாக கரையை சரிசெய்து பலபடுத்தி மீண்டும் வெள்ளம் உள்ளே புகாமல் செய்வது , பிறகு உள்ளே வந்த வெள்ளத்தை கையாளுவது. இதுதான் திட்டம்.


பயிர்ச்சி 

சிங்கள ராணுவம் உடைத்துக்கொண்டு உள்ளே வரக்கூடிய பாதைகள் இனம் காணபட்டு அங்கு இருக்கும் காவலரணை மீண்டும் கடுமையானதாக ஆக்குவது , மேலதிக படைகள் உள்ளே நுழைய முடியாது , உள்ளே சென்ற படைகள் திரும்ப முடியாது. இதுதான் திட்டம்.

சிங்கள படைகள் உள்ளே அகப்பட்டன சரியாக தாக்கி அழிக்க பட்டார்கள். ஆயுதங்கள் கைப்பற்றபட்டன. உள்ளே நுழைய முற்பட்ட மேலதிக படைகள் பின் வாங்கி தங்கள் நிலைக்கு திரும்பின. – இதுதான் பால்ராஜ். இந்த தாக்குதலில் கருணா அம்மான் அவர்களது படைகள் காவலரணை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள்.

கிளிநொச்சி படைமுகாம் அழிப்பு

சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிவரை  தங்கள் வசமாக்கிய சிங்களப்படை , கிளிநொச்சியில் படைமுகாம் அமைத்து நிலைகொண்டிருந்தார்கள். கிளிநொச்சி ராணுவ முகாமை தாக்கி அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டு திட்டம் வகுக்கபட்டது. ஆனையிறவு பரந்தன் கிளிநொச்சி இராணுவ படைத்தளம் நமது PSLV ராக்கெட் போன்று நீளமாக இருக்கும் ஒரு இடம். ஒரு அற்புதமான தாக்குதல் திட்டம் இங்கு பால்ராஜ் அவர்களால் வகுக்கபட்டு இயக்க தலைவரால் செழுமை படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

கடுமையான தாக்குதல் தருணங்கள்  


பரந்தன் என்னும் இடத்திற்கும்கரடிப்போக்கு என்னும் இடத்திற்கும்  இடையே ஒரு குறுக்கறுப்புத் தாக்குதலை நடத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதள்  திட்டங்கள் வகுக்க பட்டன.
மிகவும் ஆபத்தான குறுக்கறுப்பு தாக்குதலை பால்ராஜ் முன்னின்று நடத்துவது என்றும் , முகாமை அழிப்பதை பால்ராஜின் உதவி தளபதி கர்னல் தீபன் செய்வது என்றும் முடிவாகியது. குறுக்கறுத்து தனது கட்டளை பீடத்தை பால்ராஜ் நிறுவினார். சிங்கள ராணுவம் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பால்ராஜை அங்கிருந்து அப்புறபடுத்த முடியவில்லை. பால்ராஜின் படைஅணி ஒரு தடுப்பு சுவராய் மாறி சிங்கள ராணுவம் உள்ளே நுழையவோ, அங்கிருக்கும் ராணுவத்திற்கு உதவவோ முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியது. அந்த நீண்ட தளம் இரண்டாக பிளவு பட்டது. கிளிநொச்சி பகுதியில் அமைந்திருந்த ராணுவ முகாமை ஒழித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினரை அழித்து மிகபெரும் ஆயுத குவியலை தங்கள் வசம் எடுத்து சென்றார்கள். இந்த தாக்குதலில் தீபனின் பங்கு இருந்தாலும், இந்த வெற்றி முழுக்க முழுக்க பால்ராஜின் ராணுவ மூளைக்கு கிடைத்த ஒரு வெற்றியாக தான் பார்க்கபடுகிறது. இதற்காக உளவு அமைப்புகள் மேற்கொண்ட பணியும் மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாக இருந்தது.

வன்னி விக்கிரம

வன்னி விக்கிரம படை நடவடிக்கை என்பது சிங்கள ராணுவம் ஓமந்தையில் இருந்து கோகோவில் நோக்கி படை நகர்த்திய ஒரு நிகழ்வாகும். மேலும் இது ஒரு மரபுவலி தாக்குதல். இதற்கான எதிர்தாக்குதலை பால்ராஜ் அவர்கள் பனிக்க நீராவி என்னும் இடத்தில் நடத்தினார். இந்த மரபுவழி சண்டையில் சிங்கள படைகளின் துப்பாக்கி சுடுதல் மிக அதிகமாக இருந்தது. பால்ராஜ் வசம் இருந்தவர்கள் அனுபவம் குறைந்த வீரர்கள் , யோசித்த பால்ராஜ் தானே களத்தில் இறங்கினார். சண்டையை முன்னேடுத்தபடியே கள உத்தரவுகளையும் வழங்கினார். பால்ராஜ் களமுனையில் போராடுவதே ஏனைய போராளிகளுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. “வன்னி விக்கிரம” நடவடிக்கையை கைவிட்டுவிட்டு சிங்கள படை ஓமந்தை திரும்பியது.

சத்ய சோதனை

எதிரிப்படைகளை சரியாக திட்டமிட்டு,  நிலையெடுத்து பந்தாடிய பால்ராஜ் அவர்களுக்கு தலைவர் ஒரு திட்டம் வைத்து சோதித்தார். அவரது மனோ திடத்தையும், அற்பணிப்பையும் சோதிக்க ஒரு சந்தர்ப்பம் என்றுகூட சொல்லலாம்.

அவரை புலிகள் இயக்கத்தில் உள்ளே கொண்டுவந்து, இந்திய ராணுவ பயிற்சியை வழங்கி, தலைவரிடத்தில் அறிமுகபடுத்தி அவரது திறமைக்கு உரியபதவிகள் வழங்கி, வாய்புகள் சரிவர அமைத்து கொடுத்த “மாத்தையா” அவர்கள் இந்தியா வின் RAW என்கிற உளவு அமைப்பின் கை கூலியாக மாறினார் என்கிற ஆதாரங்கள் புலிகளுக்கு கிடைத்தது. உளவாளிகள் எல்லா இடங்களிலும் இரு தரப்பாலும் வைத்திருப்பது வழமையான ஒன்று , ஆனால் இந்தியா  அதில் நுழைந்து உள்ளே மூன்றாம் தரப்பு உளவாளி என்று சிலரை வைத்திருந்தார்கள்.


“மாத்தையாவும் பிரபாகரனும் " 

புலிகளின் தலைமை இனி யோசிக்க ஒன்றும் இல்லை , நமது அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர் , பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் எல்லா விசயங்களையும் செய்ய கூடிய ஒருவர் இந்த நிலைக்கு சென்றுவிட்டார் என்பதே மிகபெரும் அதிர்ச்சி , எனவே எல்லோருக்கும் பாடமாக இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

பல மூத்த தளபதிகள் இருக்கும் போது , பால்ராஜ் அவர்களுக்கு மாத்தையாவை கைதுசெய்து அழைத்துவரும் கடுமையான பணி வழங்கப்பட்டது.


பால்ராஜ் என்ன செய்தார்....மாத்தையா கைது செய்யப்பட்டரா..? பால்ராஜ் மாத்தையா பக்கம் சாய்ந்தாரா...? அடுத்த பதிவில் பாப்போம் ..சத்திய சோதனையை...

திங்கள், 23 அக்டோபர், 2017

ஈழ போராட்டத்தில் வீர தளபதிகள் - வெற்றியும் தோல்வியும்


தளபதி தீபனும் படையுடன் இணைந்தார். தாக்குதல் தொடங்கியது. காவல் அரண்கள் அழிக்க பட்டது. பின் கரும்புலி தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. வானுர்தி இறங்குதளத்தை தாக்கி பிடிக்கும் நேரத்தில் இரு படைகளும் கடுமையான தாக்குதலை  நடத்தினார்கள். இலங்கை ராணுவத்துக்கு வானுர்தி தளத்தை இழந்தால் தோல்வி நிச்சயம் என்று புரிந்திருந்தது. அதே வேளையில் வயல் வெளியில் இருந்து தாக்குதல் நடத்திவந்த புலிகள் அணி பின்னடைவை சந்திக்கும் செய்தி கிடைத்தது. பால்ராஜ் உடனடியாக தீபனை கட்டளை பீடத்தில் அமர்ந்து தாக்குதலை ஒருங்கினைக்க சொல்லிவிட்டு, லேப்.கேணல் நவநீதன் தலைமையில் இருந்த அணியில் அவரே நேரே களத்தில் இறங்கினார். வயல் வெளியில் இருந்த அந்த அணியை ஒருங்கிணைத்து தானே முன்னிருந்தது நடத்தி வானுர்தி தளத்தை பிடிப்பது என்ற முடிவோடு களத்தில் இறங்கினார்.



பகல் வேலை என்றாலும் மிகவும் தந்திரமான தாக்குதளை முன்னெடுத்து வானுர்தி தளத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார். இந்த செய்தி அறிந்த இலங்கை படை தோல்வி உறுதி என்பதை புரிந்துகொண்டு பின் வாங்க ஆரம்பித்தார்கள். தற்காப்பு தாக்குதல் நடத்திக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொண்டு வன்னி முகாமில் தஞ்சம் அடைந்தார்கள். இந்த தாக்குதலில் மிகபெரும் ஆயுத குவியலை புலிகள் கையகபடுத்தினார்கள். புலிகளுக்கு முதன்முதலில் 50 எம் எம் காலிபர் துப்பாக்கிகள் பரிசாக கிடைத்தன.


பால்ராஜ் மற்றும் தீபன் (புலிகளின் உடையில் இருப்பவர்)


இந்த தாக்குதல் வெற்றிகள் பால்ராஜின் படைநடத்தும் திறமையை வெளிபடுத்த ஒரு வாய்பாக அமைந்தது.  அவரே கள முனையில் ஆயுதம் ஏந்தி  நின்று படை நடத்தியது மற்ற புலி வீரர்களுக்கு மிகபெரும் ஒரு மன  உறுதியை கொடுத்தது. அதுவே தாக்குதலில் வெற்றி பெறுவதர்க்கான மூல காரணமாகவும் இருந்தது.

இந்த வெற்றிகள் பால்ராஜ் என்கிற வீரன் திறமையாக படை நடத்துகிறான் என்று எதிரிகளை தெரிந்து கொள்ளவைத்தது.


யானை இரவு முகாம் தாக்குதல்

முகாம்களில் மீது நடந்த வெற்றிகரமான தாக்குதல் புலிகளுக்கு புதிய ஒரு உத்வேகத்தை கொடுத்தது. கைப்பற்றிய ஆயுதங்கள் வேறு அவர்களுக்கு மேலதிக தெம்பை கொடுத்தது. அடுத்த இலக்கு யானை இரவு படை முகாம் என்று தாக்குதல் திட்டம்  தயாரிக்க பட்டது. திட்டத்தின் பெயர் – “ நீர், நிலம் , ஆகாயம் “ என்றிடபட்டது.






மாத்தையா தலைமையில் இந்த தாக்குதல் திட்டம் தயாரிக்க பட்டு தொடங்க பட்டது. பல்வேறு களமுனைகளில் புலிகள் இழப்புகளை சந்தித்தார்கள். ஒரு சில சிறிய முகாம்கள் மட்டுமே தாக்கி அழிக்க முடிந்தது. இதற்கு மாறாக பால்ராஜின் அணி ஒரு பெரிய முகாமை கைப்பற்றியது. புலிகள் பின்வாங்கும்  நேரம்வரை அந்த முகாம் பால்ராஜ் படையின் வசமே இருந்தது. பின் அந்த முகாமை தாக்கி அழித்துவிட்டு பால்ராஜ் படையணி திரும்பியது. புலிகள் சுமார் 673 வீரர்களை அந்த போரில் இழந்தார்கள். புலிகளுக்கு இந்த தாக்குதல் தோல்வி என்றாலும் பால்ராஜை பொறுத்தவரை இது ஒரு வெற்றிகரமான தாக்குதல் தான்.

சார்லஸ் அன்டனி படையணி

புலிகளின் முதலாவது மரபுவழி படையணி ஆகும். தலைவர் பிரபாகரனின் உற்ற நண்பர் சார்லஸ் அன்டனி பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணிக்கு யாரை தளபதியாக நியமிப்பது என்கிற குழப்பம் நிலவ வில்லை. தலைவர் மனதில் மிகதெளிவாக பால்ராஜ் என்கிற எண்ணம் இருந்தது. முதலாவது மரபுவழி படையணிக்கு பால்ராஜ் தளபதியாக நியமிக்க பட்டார்.


காவல் அறன் தகர்ப்பு

முதல் திட்டமாக தேவையான ஆயுதங்களுக்கான பட்டியல் தயாரிக்க பட்டது. தலைவரிடம் இந்த பட்டியல் வழங்க பட்டது. அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட விசயம் இதுதான் –தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளது ஆனால் பயிற்சிக்கு ஆயுதங்களோ , ரவைகளோ ( தோட்டாக்கள்) இல்லை என்பது தான். அதன் தொடர்ச்சியாக தலைவரிடம் இருந்து பால்ராஜ் அவர்களுக்கு வந்த அறிவுறுத்தல் தேவையான ரவைகளோ ஆயுதமோ இந்த நாட்டில் தான் இருக்கிறது , அதுவும் நமது எதிரியின் கையில். எடுத்துகொள் என்பது தான் அந்த அறிவுறுத்தல்.



திட்டம் தயாரிப்பு பணியில் 

பால்ராஜ் களத்தில் இறங்கினார். முதலில் அருகில் இருக்கும் காவல் தடுப்பு அரண்களை தாக்கி அழிப்பது அங்கிருக்கும் ஆயுதங்களை தங்கள் வசமாக்குவது. இரண்டாவது ஆயுத சேமிப்பு நடக்கும் முகாம்களை அழிப்பது.  இதற்கென திட்டம் தயாரிக்க பட்டது.

தரை நீர் தாக்குதல்

தரை மற்றும் நீர் வழி தாக்குதலை தொடுப்பது என்பதுதான் திட்டம். முதலில் தரைவழி நடவடக்கை மட்டுமே நடத்த பட்டுவந்தது, ராணுவ சோதனை சாவடிகள்  நீர் நிலைகளுக்கு அருகில் அதிகமாக இருப்பதுதான் இந்த யோசனைக்கு காரணம். நீர்வழி வருவதில் மிகவும் ஆபத்தான விசயம் எதிரிக்கு வருவது தெரிந்து அவர்கள் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தால் தப்பி போக வழியில்லை . ஆனாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வெற்றிகள் குவிக்கப்பட்டது. பெரும் அளவு ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.


கைப்பற்ற பட்ட recoilless rifle (RCLR) or recoilless gun

தலைவர் தளபதிகளை அழைத்து இப்படி காவல் அரண் ஒவ்வொன்றாக அழித்து வந்தால் நமது நோக்கம் நிறைவேறாது. நீங்கள் வேறு திட்டம் தயார் செய்து வாருங்கள் என்று அறிவுறுத்தினார்.

தலைவரின் அறிவுறுத்தலின் படி ஒரே நேரத்தில் இருபத்து நான்கு காவல் அரண்களை தாக்கி அழிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு தலைவரின் ஒப்புதலுக்கு சென்றபோது அவரிடம் இருந்து வந்த அறிவுறுத்தல் – முதல் பெரிய தாக்குதல் திட்டத்தோடு போகிறீர்கள், இதன் வெற்றி தோல்வி நமது ஏதிர்கால நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த கவனத்தோடு உளவுத்தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துகொள்ளுங்கள். பயிற்சி மிக முக்கியம் என்பதே அது.

அதன் படி மீண்டும் உளவு தகவல்கள் எதிரியின் எல்லைக்கே சென்று  சரிபார்க்கபட்டது. கடுமையான பயிற்சியும் நடைபெற்றது. இந்த நடவடிக்கை மிகபெரும் வெற்றியை கொடுத்தது. இது எதிர்காலத்தில் மிகபெரும் வெற்றிகள் பெற முடியும் என்கிற தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தது.

பொட்டுஅம்மான் மற்றும் பால்ராஜ்  


இந்த நிகழ்விற்கு பிறகு சுமார் 250க்கும்  அதிகமான காவல் அரண்கள் மற்றும் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த வெற்றிகளை  தொடர்ந்து பால்ராஜ் அவர்கள் இயக்கத்தின் ராணுவ துணை தளபதியாக நியமிக்க பட்டார்.

“யாழ்தேவி”

1993 – இல் பூநகரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடவடிக்கை எடுப்பதர்க்காக பால்ராஜ் முழுவீச்சில் இருந்தார். உளவு செய்திகள் மற்றும் ஆயுதப்பயிற்சிகான திட்டங்கள் , பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் தீவரமாக ஈடுபட்டிருந்த வேளையில் முக்கியம் வாய்ந்த ஒரு உளவு செய்தி தலைவரிடம் இருந்து கிடைத்தது. யாழ் நகரை இணைக்கும் கிளாலி கடற்கரை சாலையை மூடுவது என்கிற நோக்கத்தோடு யானையிறவு முகாமில் இருந்து பெரும் படையெடுப்பு நடக்க இருக்கிறது அந்த திட்டத்தின் பெயர் “யாழ்தேவி” என்கிற விவரம் தான் அது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் இலங்கை ராணுவத்திற்கு  கிளாலி நகரம் வசப்பட்டுவிடும்.

யாழ்தேவி நடவடிக்கை வெற்றிபெற்றால் புலிகளில் ராணுவ நடவடிக்கை மிகபெரும் ஒரு தொய்வை சந்திக்கும். யாழ் நகரை இணைக்கும் கிளாலி கடற்கரை சாலையை மூடுவது மக்களை புலம் பெயரவைக்கும் ஒரு முயற்சி . இதை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை தடுத்துநிறுத்தபட வேண்டும் என்கிற உணர்வோடு திட்டம் தீட்டப்பட்டது. இது எதிர் தாக்குதல் ,கால அளவு மிகவும் குறைவு 

யாழ் தேவி யாருக்கு வெற்றியை கொடுத்தது பார்போம்..அடுத்த பதிவில்..

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...